ஆவியானவரே அன்பின் ஆவியானவரே - Aaviyanavare Anbin Aaviyanavare

ஆவியானவரே அன்பின் ஆவியானவரே

இப்போ வாரும் இறங்கி வாரும்

எங்கள் மத்தியிலே

உளையான சேற்றினின்று

தூக்கி எடுத்தவரே

பாவம் கழுவி தூய்மையாக்கும்

இந்த வேளையிலே

பத்மு தீவினிலே

பக்தனை தேற்றினீரே

என்னையும் தேற்றி ஆற்ற வாரும்

இந்த வேளையிலே

சீனாய் மலையினிலே

இறங்கி வந்தவரே

ஆத்ம தாகம் தீர்க்க வாரும்

இந்த வேளையிலே

நேசரின் மார்பினிலே

இனிதாய் சாய்ந்திடவே

ஏக்கமுற்றேன் விரும்பி வந்தேன்

உந்தன் பாதத்திலே

ஆவியின் வரங்களினால்

என்னையும் நிரப்பிடுமே

எழுந்து ஜொலிக்க எண்ணெய் ஊற்றும்

இந்த வேளையிலே