அநாதி தேவன் உன் அடைக்கலமே - Anathi thevan un ataikkalame

அநாதி தேவன் உன் அடைக்கலமே

அவர் நித்திய புயங்கள் உன் ஆதாரமே

இந்த தேவன் என்றென்றுமுள்ள

சதா காலமும் நமது தேவன் – மரண

பரியந்தம் நம்மை நடத்திடுவார்

காருண்யத்தாலே இழுத்துக்கொண்டார்

தூய தேவ அன்பே

இவ்வனாந்திரத்தில் நயங்காட்டி உன்னை

இனிதாய் வருந்தி அழைத்தார்

கானக பாதை காரிருளில்

தூய தேவ ஒளியே

அழுகை நிறைந்த பள்ளத்தாக்குகளை

அரும் நீருற்றாய் மாற்றினாரே

கிருபை கூர்ந்து மனதுருகும்

தூய தேவ அன்பே

உன் சமாதானத்தின் உடன்படிக்கை தனை

உண்மையாய் கர்த்தர் காத்துக் கொள்வார்

வறண்ட வாழ்க்கை செழித்திடுதே

தூய தேவ அருளால்

நித்திய மகிழ்ச்சி தலைமேல் இருக்கும்

சஞ்சலம் தவிப்பும் ஓடிப்போம்

ஆனந்தம் பாடி திரும்பியே வா

தூய தேவ பெலத்தால்

சீயோன் பர்வதம் உன்னைச் சேர்த்திடுவார்

சந்ததம் மகிழ்ச்சி அடைவாய்

அநாதி தேவன் உன் அடைக்கலமே - Anathi thevan un ataikkalame

Anathi thevan un ataikkalame

Avar niththiya puyangkal un aatharame

Intha thevan ententumulla

Satha kalamum namathu thevan

Marana pariyantham nammai nataththituvar

Karunyaththale izhuththukkondar

Thooya theva anpe

Ivvananthiraththil nayangkaatti unnai

Inithay varunthi azhaiththar

Kanakap pathai karirulil

Thooya theva oliye

Azhukai niraintha pallaththakkukalai

Arumneeruray matinare

Kirupai koornthu manathurukum

Thooya theva anpe

Un samathanaththin utanpatikkai thanai

Unmaiyay karththar kaththuk kolvar

Ippuvi yaththirai katanthituvay

Thooya theva thayaval

Katum kanakaththil karththar marpinile

Kitaikkum iLaippaRuthale

Varanda vazhkkai chezhithiduthe

Thooya theva arulal

Niththiya makizchi thalaimel irukkum

Sanchalam thavippum oodippom

Aanantham paadi thirumpiye va

Thooya theva pelaththal

Siyon parvatham unnai serththiduvar

Santhatham malizchi adaivay..