அன்பில் என்னைப் பரிசுத்தனாக்க - Anbil Ennai Parisuthanaakka

அன்பில் என்னைப் பரிசுத்தனாக்க

உம்மைக் கொண்டு சகலத்தையும்

உருவாக்கியே நீர் முதற்பேரானீரோ

தந்தை நோக்கம் அநாதியன்றோ

என் இயேசுவே நேசித்தீரோ

எம்மாத்திரம் நான் இயேசுவே

இன்னும் நன்றியுடன் துதிப்பேன்

மரித்தோரில் முதல் எழுந்ததினால்

புது சிருஷ்டியின் தலையானீரே

சபையாம் உம் சரீரம் சீர் பொருந்திடவே

ஈவாய் அளித்தீர் அப்போஸ்தலரை

முன்னறிந்தே என்னை அழைத்தீரே

முதற்பேராய் நீர் இருக்க

ஆவியால் அபிஷேகித்தீர் என்னையுமே

உம் சாயலில் நான் வளர

வருங்காலங்களில் முதற்பேராய்

நீர் இருக்க நாம் சோதரராய் உம்

கிருபையின் வார்த்தையை வெளிப்படுத்தி

ஆளுவோம் புது சிருஷ்டியிலே

நன்றியால் என் உள்ளம் நிறைந்திடுதே

நான் இதற்கென்ன பதில் செய்குவேன்

உம்மகா நோக்கம் முற்றுமாய் நிறைவேறிட

என்னை தந்தேன் நடத்திடுமே

அன்பில் என்னைப் பரிசுத்தனாக்க - Anbil Ennai Parisuthanaakka

Anbil Ennai Parisuthanaakka

Ummai Kondu Sagalathaiyum

Uruvaakkiye Neer Mutharperaaniro

Thanthai Nokkam Anaathiyantro

En Yesuvae Nesithiro

Emmaathiram Naan Yesuve

Innum Nantriyudan Thuthippen

Marithoril Muthal Ezhunthathinaal

Puthu Sirushtiyin Thalaiyaanirae

Sabaiyaam Um Sariram Seer Porunthidave

Eevaai Azhitheer Apposthalarai

Munnarinthae Ennai Azhaitheerae

Mutharperaai Neer Irukka

Aaviyaal Abishegitheer Ennaiyumae

Um Saayalil Naan Valara

Varungaalangalil Mutharperaai

Neer Irukka Naam Sothararaai Um

Kirubaiyin Vaarthaiyai Velippaduthi

Aaluvom Puthu Sirushtiyalae

Nantriyaal En Ullam Nirainthiduthae

Naan Itharkenna Bathil Seiguven

Ummagaa Nokkam Muttrumaai Niraiverida

Ennai Thanthen Nadathidumae