கர்த்தரின் கை குறுகவில்லை - Karththarin kai kurukavillai

கர்த்தரின் கை குறுகவில்லை

கர்த்தரின் வாக்கு மாறிடாதே

சுத்தர்களாய் மாறிடவே

சுதன் அருள் புரிந்தனரே

விசுவாசியே நீ பதறாதே

விசுவாசியே நீ கலங்காதே

விசுவாசித்தால் நீதிமான்

இன்றும் என்றும் பிழைப்பான்

பரிசுத்த ஆவியானவரே

பரிசுத்த பாதையில் நடத்திடுவார்

கிருபையிலே வளர்ந்திடுவோம்

வரங்களை நாடிடுவோம்

திருச்சபையே கிரியை செய்வாய்

திவ்விய அன்பில் பெருகிடுவாய்

தலைமுறையாய் தலைமுறையாய்

தழைத்திட அருள் புரிவார்

நெஞ்சமே நீ அஞ்சிடாதே

தஞ்சம் இயேசு உன் அரணே

தம் ஜனத்தை சீக்கிரமாய்த்

தம்முடன் சேர்த்துக்கொள்வார்

மேகம் போன்ற வாக்குத்தத்தம்

சூழ நின்றே காத்திருக்க

விசுவாசத்தால் உரிமை கொள்வாய்

விரைந்து முன் ஏகிடுவாய்

கர்த்தரின் கை குறுகவில்லை - Karththarin kai kurukavillai

Karththarin kai kurukavillai

Karththarin vakku maritathe

Suththarkalai maritave

Suthan arul purinthanare

Visuvasiye nee patharathe

Visuvasiye nee kalangkathe

Visuvasaththal neethimaan

Intum entum pizhaippan

Parisuththa aaviyanavare

Parisuththa pathaiyil nataththituvar

Kirupaiyile valarnthiduvom

Varangalai nadiduvom

Thiruchapaiye kiriyai seyvai

Thilviya anpil perukituvai

Thalaimuraiyai thalaimuraiyai

Thazhaiththida arul purivar

Nenjame nee anjidathe

Thanjam Yesu un arane

Tham janaththai seekkirame

Thammudan serththuk kolvar

Mekam ponta vakkuththaththam

Choozha ninte kaththirukka

Visuvasaththal urimai kolvai

Virainthu mun egiduvai.