என் இயேசுவே நான் நம்பும் தெய்வமே
நம்பினோருக்கு தஞ்சம் அவரே
நான் நம்பும் தெய்வம் இன்னாரென்று அறிந்ததால்
என் நம்பிக்கை வீணாக போகாதே - என் இயேசுவே
வறண்டு போன வாழ்வானாலும் பரவாயில்லை
அவர் நிச்சயமாக செழிக்க செய்திடுவார்
கசந்து போன வாழ்வானாலும் பரவாயில்லை
அவர் நிச்சயமாக மகிழ்ச்சியாக்கிடுவார்
துளிர்விடாத வாழ்வானாலும் பரவாயில்லை
அவர் நிச்சயமாக துளிர்க்க செய்திடுவார்
இடிந்து போன வாழ்வானாலும் பரவாயில்லை
அவர் நிச்சயமாக கட்டி எழுப்பிடுவார்
Nan nampum deivam innarendru
arinthathal en nampikkai veenaga pogathu