பலிபீடத்தில் என்னை பரனே - Pali peedaththil ennai paranae

பலிபீடத்தில் என்னை பரனே

படைக்கிறேனே இந்த வேளை

அடியேனை திருச்சித்தம் போல

ஆண்டு நடத்திடுவீர்

கல்வாரியின் அன்பினையே

கண்டு விரைந்தோடி வந்தேன்

கழுவும் உம் திரு இரத்தத்தாலே

கறை நீங்க இருதயத்தை

நீரன்றி என்னாலே பாரில்

ஏதும் நான் செய்திட இயலேன்

சேர்ப்பீரே வழுவாது என்னை

காத்துமக்காய் நிறுத்தி

ஆவியோடாத்மா சரீரம்

அன்பரே உமக்கென்றும் தந்தேன்

ஆலய மாக்கியே இப்போ

ஆசீர்வதித்தருளும்

சுயமென்னில் சாம்பலாய் மாற

சுத்தாவியே அனல் மூட்டும்

ஜெயம் பெற்று மாமிசம் சாக

தேவா அருள் செய்குவீர்

பொன்னையும் பொருளையும் விரும்பேன்

மண்ணின் வாழ்வையும் வெறுத்தேன்

மன்னவன் இயேசுவின் சாயல்

இந்நிலத்தே கண்டதால்

பலிபீடத்தில் என்னை பரனே - Pali peedaththil ennai paranae

Pali peedaththil ennai paranae

Pataikkiraenae intha vaelai

Atiyaenai thiruchchiththam pola

Aanndu nadaththiduveer

Kalvaariyin anpinaiyae

Kanndu virainthoti vanthaen

Kaluvum um thiru iraththaththaalae

Karai neenga iruthayaththai

Neeranti ennaalae paaril

Aethum naan seythida iyalaen

Serppeerae valuvaathu ennai

Kaaththumakkaay niruththi

Aaviyodaathmaa sareeram

Anparae umakkentum thanthaen

Aalaya maakkiyae ippo

Aaseervathiththarulum

Suyamennil saampalaay maara

Suththaaviyae anal moottum

Jeyam pettu maamisam saaka

Thaevaa arul seykuveer

Ponnaiyum porulaiyum virumpaen

Mannnnin vaalvaiyum veruththaen

Mannavan Yesuvin saayal

Innilaththae kanndathaal