ஸ்தோத்திரம் துதி பாத்திரா - Sthothiram thuthi pathira

ஸ்தோத்திரம் துதி பாத்திரா

உம்மை இன்றும் என்றும்

துதித்திடுவேன்

காத்தீரே என்னைக் கருத்தாக

வழுவாமல் என்னையும் உமக்காக

எடுத்தீர் எனையும் உமக்காக

கொடுத்தீர் உம்மையும் எனக்காக

வல்ல வான ஞான வினோதா

துதியே துதியே துதித்திடுவேன்

எல்லாக் குறையும் தீர்த்தீரே

தொல்லைகள் யாவும் தொலைத்தீரே

அல்லல் யாவும் அறுத்தீரே

அலையும் என்னையும் மீட்டீரே - ஸ்தோத்திரம்

நம்பினோரைக் காக்கும் தேவா

துதியே துதியே துதித்திடுவேன்

அம்புவி யாவும் படைத்தீரே

அம்பரா உந்தன் வாக்காலே

எம்பரா எல்லாம் ஈந்தீரே

நம்பினோர்க் குந்தன் தயவாலே - ஸ்தோத்திரம்

கண்ணின் மணிபோல் காத்தீரே

எம்மைத் துதியே துதியே துதித்திடுவேன்

அண்ணலே உந்தன் அருளாலே

அடியாரைக் கண் பார்த்தீரே

மன்னா எமக்கும் நீர் தானே

எந்நாளும் எந்தன் துணை நீரே - ஸ்தோத்திரம்

தீயோன் அம்புகள் தாக்காதே

எம்மைத் துதியே துதியே துதித்திடுவேன்

தேவனே நீர் உந்தன் சிறகாலே

தினமும் மூடிக் காத்தீரே

தீதணுகாதும் மறைவினிலே

தேடியுமதடி தங்கிடுவேன் - ஸ்தோத்திரம்

அல்லேலூயா ஸ்தோத்திரமே

துதியே துதியே துதித்திடுவேன்

அகில சிருஷ்டிகளும் துதிக்க

அடிமை துதியா திருப்பேனோ

அல்லும் பகலும் நித்தியமாய்

அன்பே உமையே துதித்திடுவேன் - ஸ்தோத்திரம்