தகப்பனே தந்தையே - Thagappane thanthaiye

தகப்பனே தந்தையே

தலைநிமிரச் செய்பவர் நீரே

கேடகம் நீரே மகிமையும் நீரே

தலை நிமிரச் செய்பவர் நீரே

எதிரிகள் எவ்வளவாய் பெருகிவிட்டனர்

எதிர்த்தெழுவோர் எத்தனை

மிகுந்து விட்டனர்

ஆனாலும் சோர்ந்து போவதில்லை

தளர்ந்து விடுவதில்லை

தகப்பன் நீர் தாங்குகிறீர்

என்னைத் தள்ளாட விடமாட்டீர்

படுத்துறங்கி மகிழ்வுடனே

விழித்தெழுவேன்

ஏனெனில் கர்த்தர்

என்னை ஆதரிக்கின்றீர்

அச்சமில்லையே கலக்கமில்லையே

வெற்றி தரும் கர்த்தர் என்னோடு

தோல்வி என்றும் எனக்கில்லையே

ஒன்றுக்கும் நான் கலங்காமல்

ஸ்தோத்தரிப்பேன்

அறிவுக்கெட்டா பேர் அமைதி

பாதுகாக்குதே

நீர் விரும்பத்தக்கவை,தூய்மையானவை

அவைகளையே தியானம் செய்கின்றேன்

தினம் அறிக்கை செய்து ஜெயம் எடுப்பேன்

தகப்பனே தந்தையே - Thagappane thanthaiye

Thagappane thanthaiye

Thalai nimira seipavar neere

Kaedakam neerae makimaiyum neerae

Thalai nimirach seypavar neerae

Ethirikal evvalavaay perukivittanar

Ethirththeluvor eththanai

Mikunthu vittanar

Aanaalum sornthu povathillai

Thalarnthu viduvathillai

Thakappan neer thaangukireer

Ennaith thallaada vidamaattir

Paduththurangi makilvudanae

Viliththeluvaen

Aenenil Karththar

Ennai aatharikkinteer

Achchamillaiyae kalakkamillaiyae

Vetti tharum Karththar ennodu

Tholvi entum enakkillaiyae

Ontukkum naan kalangaamal

Sthoththarippaen

Arivukketta paer amaithi

Paathukaakkuthae

Neer virumpaththakkavai,thooymaiyaanavai

Avaikalaiyae thiyaanam seykinten

Thinam arikkai seythu jeyam eduppaen