உம்மைப் போல் யாருண்டு எந்தன் - Ummai pol yarundu enthan

உம்மைப் போல் யாருண்டு எந்தன்

இயேசு நாதா இந்தப் பார்தலத்தில்

உமைப் போல் யாருண்டு

பாவப்பிடியினில் சிக்கி நான் உழன்றேன்

தேவா தம் அன்பினால் மன்னித்தீர்

உலகம் மாமிச பிசாசுக்கடியில்

அடிமையாகவே பாவி நான் ஜீவித்தேன்

நிம்மதி இழந்தேன் தூய்மையை மறந்தேன்

மனம்போல் நடந்தேன்

ஏமாற்றம் அடைந்தேன்

என்னையா தேடினீர் ஐயா இயேசு நாதா

உம்மை மறந்த ஒர் துரோகி நான்

என்னையா தேடினீர் ஐயா இயேசு நாதா

அடிமை உமக்கே இனி நான்

இன்றைக்கு நான் செய்யும்

இந்தத் தீர்மானத்தை என்றைக்கும்

காத்திட ஆவியால் நிரப்பும்

நொறுக்கும் உருக்கும் உடையும் வனையும்

உமக்கே உகந்த தூய சரீரமாய்

ஐம்பொறிகளையும் உமக்குள் அடக்கும்

இயேசுவே ஆவியால் நிரப்பும்

வெற்றி வாழ்க்கையுள்ள மகனாய் திகழ

அக்கினி என்னுள்ளம் இறக்கும்

வீட்டிலும் ஊரிலும் செல்லுமிடமெங்கும்

சோதனை வந்திடில் கர்த்தா நீர் காத்திடும்

மேசியா வருகை வரையில் பலரை

சிலுவைக் கருகில் அழைக்க ஏவிடும்

முழங்காலில் நிற்க வேதத்தை அறிய

தினந்தோறும் தேவா உணர்த்தும்

உமக்கும் எனக்கும் இடையில் எதுவும்

என்றுமே வராமல் காத்திடும்

உம்மைப் போல் யாருண்டு எந்தன் - Ummai pol yarundu enthan

Ummai pol yarundu enthan

Yesu naathaa intha paarthalaththil

Ummai pol yaarunndu

Paavappitiyinil sikki naan ulanten

Thaevaa tham anpinaal manniththeer

Ulakam maamisa pisaasukkatiyil

Atimaiyaakavae paavi naan jeeviththaen

Nimmathi ilanthaen thooymaiyai maranthaen

Manampol nadanthaen

Aemaattam atainthaen

Ennaiyaa thaetineer aiyaa Yesu naathaa

Ummai marantha or thuroki naan

Ennaiyaa thaetineer aiyaa Yesu naathaa

Atimai umakkae ini naan

Intaikku naan seyyum

Inthath theermaanaththai entaikkum

Kaaththida aaviyaal nirappum

Noraுkkum urukkum utaiyum vanaiyum

Umakkae ukantha thooya sareeramaay

Aimporikalaiyum umakkul adakkum

Yesuvae aaviyaal nirappum

Vetti vaalkkaiyulla makanaay thikala

Akkini ennullam irakkum

Veettilum oorilum sellumidamengum

Sothanai vanthitil karththaa neer kaaththidum

Maesiyaa varukai varaiyil palarai

Siluvaik karukil alaikka aevidum

Mulangaalil nirka vaethaththai ariya

Thinanthoraுm thaevaa unarththum

Umakkum enakkum itaiyil ethuvum

Entumae varaamal kaaththidum